உமையவன்
இயற்பெயர் ப. ராமசாமி, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலத்தில் வசித்து வருகிறார். தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறார் படைப்புத்தளத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான அறிவியல், சூழலியல், புனைவு என பல தளங்களில் நூல்களை எழுதியுள்ளார். கவிதை, ஹைக்கூ, கட்டுரை, ஆய்வுநூல்கள், சிறார் இலக்கியம் என இருபத்தி ஐந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழக அரசு விருது, கம்போடியா அரசு விருது. திருப்பூர் இலக்கிய விருது. உழவுக்கவிஞர், கவிமாமணி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல நூல் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரின் சிறார் நூல்கள் ஆங்கிலம், கன்னடம். தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இவரது "பறக்கும் யானையும், பேசும் பூக்களும்" நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான நல்லி திசை எட்டும் விருதினைப்பெற்றுள்ளது.
இளம் எழுத்தாளர் ப. ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி, கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது, ராவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu-2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாதெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர், கலைஞர், மக்கள், பொதிகை, ஜிதமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்திய வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.