வாழ்விற்குத் தேவையான பல்வேறு செய்திகளை எளிமையான மொழியில் சொல்லிக்கொடுக்கிறார் இராஜதிலகம். பெண் சுதந்திரம் பேசும்போதும் ஆண்களைச் சாடாமல் பெண்ணின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறார். பெண்களால் அவதியுறும் ஆண்களின் நிலை குறித்தும் வருத்தம் தெரிவிக்கிறார்.
பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் வாசிப்பின் முக்கியத்துவம், குழந்தை வளர்ப்பு, பாலினப் பாகுபாடின்றிப் பிள்ளைகளை வளர்த்தல், நோ சொல்லக் கற்றுக்கொள்வது உள்ளிட்ட பல செய்திகளையும் மிக இயல்பாக எடுத்துச் சொல்வதில் ஒரு வழிகாட்டியாகப் பரிமளிக்கிறார்.
இந்நூலை வாசிப்பவர்களுக்கு மூடியிருக்கும் சில கதவுகள் திறந்து, வசந்தம் அவ்வழி வீசலாம்.
-எழுத்தாளர் லதா
Be the first to rate this book.