மாணிக்கவாசகர் வாழ்வும் வாக்கும்
-குறிஞ்சி. ஞான. வைத்தியநாதன்.
இவர் 1958ஆம் ஆண்டு, அதாவது தமது பதினான்காம் வயதில் எழுத்துத் துறையில் காலடி பதித்தவர். எண்ணற்ற படைப்பிலக்கியங்களுக்குச் சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தின் 'பல்கலைச் செல்வர்' பட்டம், புதுவை அரசின் 'பாரதிப் பட்டயம்', தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் ஆகியவை இவரது எழுத்து வன்மைக்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
அந்த வகையில் இவரது 'மாணிக்கவாசகர் வாழ்வும் வாக்கும்' என்னும் இந்நூல் பெருமானின் அருள்நிறைந்த தெய்வீக வாழ்க்கையையும், அருளிய நெறிகளையும் அற்புதமாக எடுத்தியம்புகிறது. ஆன்மிகப் பெருமக்கள் இந்நூலை வாசிக்கையில் பெரிதும் பக்திப் பரவசமுறுவார்கள் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.