சைவ சமயத்தின் திருமுறைகளில் முதன்மையானதாகப் போற்றப்படும் சிவபுராணத்தின் சிறப்பை இந்நூலில் ஆசிரியர் மிகச் சிறப்பாகத் தெளிவுரையுடனும் விளக்கவுரையுடனும் விளக்கியுள்ளார். மாணிக்கவாசகரின் உள்ளம் உருகப் பாடிய பக்திப் பாடல்களின் பொக்கிஷமான திருவாசகத்தின் ஒரு பகுதியாகச் சிவபுராணம் விளங்குகிறது.
இந்நூல் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், உயிர்களின் நிலை. சிவபெருமானின் திருவிளையாடல்கள், குருவின் மகத்துவம் ஆகியவற்றை அழகுற எடுத்துரைக்கிறது. உலக மாயையில் சிக்கித் தவிக்கும் ஆன்மாக்கள், இறைவனின் பாதாரவிந்தங்களை அடைவதற்கான வழியையும் இப்பாடல்கள் மூலம் அறியலாம்.
எக்காலத்தும் அழியாத ஆன்மீகப் பொக்கிஷமான இந்நூல் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற புகழ்மொழி இதன் சிறப்பை உணர்த்துகிறது. சிவபுராணத்தைப் பொருள் உணர்ந்து சொல்பவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்பது சைவர்களின் நம்பிக்கை.
Be the first to rate this book.