எம்.எஸ். சுப்புலட்சுமி பாடுவதற்காகவே பிறந்தவர். பல மணி நேர பயிற்சியும், இசை பக்தியும், கூடவே திறமையும் இருந்ததால் அவர் கர்நாடக இசை உலகில் பிரபலமாக விளங்கினார்.
ஐந்து வயதில் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவருடைய முதல் மேடையேற்றம் எட்டு வயதில். சுப்புலட்சுமி சிறுமியாக இருந்தபோதே வீட்டு வேலை செய்து கொண்டே ராகங்களைப் பாடி பயிற்சி செய்வாராம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி மக்களை ஊக்குவிக்க இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். குறிப்பாக சுதந்தர போராட்டத்தின்போது அவரது இசையைக் கேட்டவர்கள் ஊக்கமடைந்தார்கள். அவர் எங்கு சென்றாலும் கொண்டாடப்பட்டார். பாராட்டப்பட்டார்.
இந்தப் புத்தகத்தில் அமர் சித்ர கதா இந்த மேதைக்கு, இசை உலகில் அவருடைய விலைமதிப்பற்ற பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துகிறது.
Be the first to rate this book.