இந்திய ஆங்கில எழுத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவர் குஷ்வந்த் சிங். அவர் எதை எழுதினாலும் மக்கள் ஆசையோடு அள்ளிக்கொண்டார்கள், விரும்பிப் படித்தார்கள் என்பது தற்செயலாக நடந்ததில்லை. நாலு வரி நகைச்சுவைத் துணுக்கானாலும் சரி, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி, அவற்றை எப்படித் தரவேண்டும், வாசகனை எப்படி உள்ளிழுக்கவேண்டும், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளைக்கூடப் படிக்கச் சுவையாகத் தருவது எப்படி என்றெல்லாம் துல்லியமாக அறிந்திருந்தவர் குஷ்வந்த் சிங். அவருடைய வாழ்க்கையையும், இதழியல், இலக்கியச் சாதனைகளையும், முதன்மையான படைப்புகளையும் இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.