விடுவித்துக்கொள்ளமுடியாத நெருக்கடிகளும் அவநம்பிக்கைக்கு உள்ளாக்கும் தருணங்களும் ஒருசேர தனது வலுவான பிடியை மேலும் இறுக்கியிருக்கும் நிலையில், ஒரு கலைஞரது பணியானது, தனிநபர் சார்ந்த அகவோட்டச் சித்திரத்தை உருவாக்குவதாகவோ, உணர்ச்சிமிகு வாழ்வை பிரதிபலிப்பதாகவோ இருக்கமுடியாது. காலத்தின் மனோகதியைப் பொறுத்தே கலைச் செயல்பாட்டின் இருப்பு தன் இலக்கை உறுதிசெய்யும். அதன்படி, அரசியல் வயப்பட்ட படைப்பாக்கமே இன்றைய சமூகத்தின் நேரடி யதார்த்தமாக உருக்கொள்ளவியலும்.
அரங்கேறிவரும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் குறித்த உரையாடலை உலகெங்கிலும் களமாடச்செய்வதும், சமரசமற்ற விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விழிப்புணர்வைப் பெறச்செய்வதும் சமகாலத்திய படைப்புகளின் தலையாயக் கடமை. மற்ற கலைவடிவங்களைப் போலவே, திரைப்படக்கலையும் தனது செறிவான பங்களிப்பை இந்த உலகளாவிய உரிமைப் போராட்டத்திற்கு கையளித்திருக்கிறது. அதன் ஒருங்கிணைந்த கிளர்வுகளாக இயக்குநர்கள் தமது உரத்த குரலை இடையறாமல் ஒலித்தவண்ணம் இருக்கிறார்கள். அந்த நேயம் மிளிரும் ஒலிகளைத் தாங்கிய திரைப்படங்களின் மீதான இரசனையார்ந்த ஆக்கங்களை உள்கொண்டிருப்பதே இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.