குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் வழியாக நாமும் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளின் முன்னால் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்கும் கணங்களில் நிகழும் மாயம் இது. அந்த மாயக் கணங்களை இந்நூல் தரிசிக்க உதவும்.
அவிலா டீச்சர் என்னும் மழலையர் பள்ளி ஆசிரியையின் அனுபவங்களைப் பதிவுசெய்யும் இந்த எழுத்து, கற்றுக் கொடுத்தல் என்பது பாடம் எடுப்பது மட்டுமல்ல என்பதைச் சொல்கிறது. அவிலா டீச்சருக்கும் அவரிடம் பயிலும் குழந்தைகளுக்கும் இடையில் நிகழும் அதிசயக் கணங்களை, மழலைகளின் உரையாடலைக் கதைபோலச் சொல்லியிருக்கிறார் அவிலா டீச்சரின் கணவரும் மெல்லிசைக் கலைஞருமான எழுத்தாளர் ஜான் சுந்தர்.
Be the first to rate this book.