நாம் கவனிக்கத் தவறிய எளிய கணங்களில் ஒளிந்திருக்கும் பிரம்மாண்ட அழகை, நாம் காணாது கடந்துவிடும் எளிய மனிதர்களிடம் தென்படும் பேரழகை நமக்குக் காட்டி நிற்பவை இந்தக் கவிதைகள்.
இந்தத் தொகுப்பில் இசையின் கவிதைகளில் விசேஷமாக ‘ஏதோ ஒன்று’ கூடி வந்திருக்கிறது. அது இந்தக் கவிதைகளை இருதயத்துக்கு நெருக்கமாக்குகிறது. அந்த ஒன்று கொஞ்சம் கூடிவிட்டாலும், கொஞ்சம் குறைந்துவிட்டாலும் கூவியது குயில் அல்ல என்றாகி விடக்கூடியது.
வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் எழுந்துவர இசையிடம் ஒரு கவிதை உண்டு.
-இரா. பூபாலன்
Be the first to rate this book.