சிறார்களுக்காக எழுதப்படும் கதைகள் ஏதேனும் ஒருக் அவர்கள் வாசிக்கையில் அது பயனளிப்பதாக அமைய வேண்டும். அலைபேசிகள் வந்தபிறகு சிறார்களின் உலகம் வேறுமாதிரி மாறிப்போனது உண்மைதான். பாட்டி தாத்தாவிடம் கதை கேட்டுப்பழகும் உலகமல்ல இது. பெற்றோர்கள்தான் சிறுவர்களுக்கான பாதையை தெளிவுபடுத்த முடியும். புரவலர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறார் புத்தகங்களை வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளித்து வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எழுத்தை எழுதும் எழுத்தாளன் பெரும் வனத்தில் சிங்கம், குரங்கு, காகம் இவைகள் பேசுவதாய் கற்பனையை விரித்து எழுதுகிறான். அந்த சமயத்தில் சிங்கமாக எழுத்தாளன் தன்னை உணர்கிறான். வாசிப்போரும் சிங்கமாக, குரங்காக மாறும் நிகழ்வு ஒரு புத்தகம் வாசித்து முடியும் வரை அங்கே நிகழ்ந்து முடியும் நிச்சயமாக ! கற்பனை கதைகளுக்குள் நிஜமாக வாழுங்கள் புத்தகம் தீரும் வரை!
Be the first to rate this book.