அப்போது அவருக்கு இருபது வயது. ஒரு நாள் தூங்கி எழுகையில் அவரது ஒரு விரல் பேனாவாக உருமாறியிருந்தது. தரையில், சுவரில், மரங்களில் கிறுக்கத் தொடங்கினார். எழுத்து வந்தது. ஒரு மாளிகை குறித்து எழுதினார். மாடமாளிகை, முழுமையாக எழுதி முடிக்கையில் மாளிகை குலைந்து சரிந்து குடிசையாகியிருந்தது. அவருக்குப் புரியவந்தது. இந்தப் பேனா யாருக்கானது, எதை மட்டும் எழுதுமென்று, பிறகு அவர் ஒரு கதை எழுதினார். குருவியின் கதை, கூடு இழந்த குருவியின் கதை.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.