கலாநிதி றவூூஃப் ஸெய்ன் எழுதிய “குடும்ப வாழ்வின் உளவியல்” என்னும் இந்நூல், குடும்ப வாழ்க்கை குறித்த உளவியல் பார்வையில் தமிழ் இலக்கியத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்பும் ஒரு முன்னோடி முயற்சி.
மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் உளவியல் அடித்தளங்களையும் நடைமுறை சிக்கல்களையும் ஆழமாக பேசுகிறது இந்நூல். திருமணத்திற்கு முந்தைய வழிகாட்டலின் அவசியத்தை வலியுறுத்துவதோடு, உளவியல், சமூகம், பொருளாதாரம் எனப் பன்முகத்தன்மை கொண்ட பொருத்தத்தின் முக்கியத்துவத்தையும், தம்பதியினரிடையே நிலவ வேண்டிய திறந்த உரையாடலின் அவசியத்தையும் இந்நூல் விரிவாக முன்வைக்கிறது.
ஆரோக்கியமான திருமணத்திற்கு அடித்தளமிடும் அன்பின் பாத்திரம், ஆரோக்கியமான தாம்பத்தியம், மற்றும் முறையான பொருளாதாரத் திட்டமிடல் போன்றவற்றை ஒன்றோடொன்று இணைத்து உளவியல்ரீதியாக விளக்குகிறது இந்நூல்.
திருமண வாழ்வின் சிக்கல்களை உளவியல் நுண்ணறிவுடனும் ஞானத்துடனும் வழிநடத்துவதோடுமட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக வலிமையும் அகமகிழ்ச்சியும் நிறைந்த குடும்பங்களைக் கட்டமைப்பதே இந்நூலின் பிரதான நோக்கம். திருமணம் முடித்த மற்றும் முடிக்கவிருப்பவர்கள் என அனைவருக்கும் ஒரு முழுமையான உளவியல் கையேடாக விளங்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.