எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இதுவே முதல்முறை. எழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.
ஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.
நெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.
Be the first to rate this book.