இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன். மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன். எனினும் மானுடப் பண்புகளான காதல், நட்பு முதலானவற்றை வெளிப்படுத்தியவன். இவற்றையும் தாண்டி, தத்துவம், இசை எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவன்.
வண்ணமயமான பன்முக ஆளுமையாக விளங்கும் கிருஷ்ணனை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் இது. கிருஷ்ணனைச் சமகாலப் பின்னணியில் வைத்துக் காணும் அணுகுமுறையே இந்த நாவலின் தனித்தன்மை.
Be the first to rate this book.