கிருஷ்ண சந்தர் கதைகள் தொடாத பிரதேசங்களே இல்லை எனலாம். வெவ்வேறு கருப்பொருள்களை, வெவ்வேறு வடிவங்களை, யதார்த்த வடிவிலும் பரிசோதனையாகவும் எழுதிப் பார்த்திருக்கிறார். ரொமான்டிசத்தையும் உளவியலையும் சமூக அரசியலையும் தன் எழுத்தில், உலகத் தரமாக எழுதியவர். அவர் தன்னுடைய முற்போக்குத்தனமான எழுத்தை இரக்கத்துடனும் பரிகசிப்புடனும் படைத்த வர். அதிகாரத்தினாலும் அரசியலாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர அனுபவங்களைத் தன் எழுத்தில் தொடர்ந்து எழுதியவர். வலது, இடது என்கிற எந்த எண்ணமும் அவரிடம் இல்லை. பாதிக்கப்பட்டவரின் குரலாக, அதிகாரத்தை நோக்கிக் கேட்கும் குரலாகவே கிருஷ்ணசந்தரின் கதைகள் அமைந்துள்ளன.
Be the first to rate this book.