நான் சிறையில் இருக்கிறேன். உண்மையான சிறை அல்ல. எந்தக் குற்றம் செய்ததற்காகவும் நான் சிறையில் இல்லை. இது நானாக ஏற்படுத்திக் கொண்ட சிறை. சிறை என்று தெரியாமல் சிறையிலிருக்கிறேன்.
சிறை தவிர சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சின்னப்பூச்சி என்று கூட சொல்லலாம். சிலந்தி தன் வில்லத் தனமான கண்களால் பார்த்துக் கொண்டே இருக்கிறது. வலிய நானே அதில் போய்ச் சிக்கிக் கொண்டால் அதற்குச் சிலந்தி பொறுப்பல்ல. முழுப் பொறுப்பும் என்னைத்தான் சாரும். சிலந்தி வலைகூட நான் பின்னிக் கொடுத்ததாக இருக்கக்கூடும்.
Be the first to rate this book.