பல விதங்களிலும் வெற்றி பெற்று நன்றி மறவாத ஒரு மாணாக்கன் திரும்பி வந்து தன் பழைய உபாத்தியாயரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்துத் தன் குடும்பத்தில் ஒருவனாக நடத்திய உபாத்தியாயரின் மனைவியையும் எண்ணித் திரும்பி வந்தால் எப்படி உணருவான் என்ன செய்வான் என்று சொல்லிப் பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சிவசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாடிக்காகச் சொல்லாமல் சொல்லிச் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் எழுத ஆரம்பித்தேன்.
இந்த நாவலில் என் மனத்தில் இருந்த கல்வி பற்றிய சிந்தனைகளையும் சேர்த்து நாவலாக எழுத முயன்றேன். கோதை என்கிற கதாபாத்திரம் வந்தவுடன் நாவலுக்கு ஒரு புது பரிமாணம் வந்தது போலத் தோன்றியது எனக்கு. உணர்ச்சிகளுக்கு மிகவும் உதவின.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.