“கூட்டாட்சி முறை அரசாங்கத்தை நான் எதிர்க்கவில்லை. ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தையே நான் அதிகம் விரும்புகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவுக்கு இதுதான் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் மாகாண சுயாட்சி இருக்கும் என்றால் கூட்டாட்சி முறை அரசாங்கம் தவிர்க்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன். ஆயினும் இந்திய அரசாங்கச் சட்டம் 1935இல் கூறப்பட்டுள்ள கூட்டாட்சித் திட்டம் எனக்கு மிகவும் பயங்கரமானதாகத் தோன்றுகிறது. அது எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதற்குத் தகுந்த காரணங்களை நான் இந்த நூலில் கூறியிருப்பதாகக் கருதுகிறேன். இவற்றை எல்லோரும் பரிசீலித்து அவரவர் சொந்தமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.“
– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
Be the first to rate this book.