இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும் வெப்பமாற்றமும்| ஐம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றையு வெப்பசூட்டால் உணர்கிறோம். இயற்கையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலகமயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன.
-ஆர். நல்லகண்ணு
“கோமணம்” சூழல் கேட்டின் உச்சத்திலிருக்கும் பிரச்சினைகளையும் தொடுகிறது. உலகமயமாக்கல் விவசாயிகளை, சாதாரண மக்களின் உடம்பு ஆடைகளையெல்லாம் கழற்றி, கோமணத்தோடு நிற்பதை தலைப்பு சொல்கிறது எனலாம். மனித மனங்களின் விசித்திரங்கள். அனுபவங்கள். சூழல் நுகர்வுணர்வே வாழ்க்கையாகிப்போன தன்மை உட்பட பல விசயங்கள் இதில் உள்ளன. எளிமையான மொழி நதி நீர் போல் அனுபவங்களோடு சுலபமாக இயைந்துள்ளது.
-அவைநாயகன்
Be the first to rate this book.