உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை ; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.
- கவிக்கோ அப்துல் ரகுமான்
Be the first to rate this book.