நம் நாட்டைப் பொறுத்தவரை அறிவுத்திறன் மிக்கோரின் எண்ணிக்கை குறைவு எனக் கூறமுடியாது. ஆனால் அத்திறனைக் காலத்திற்கேற்ப அறிவியல் அடிப்படையில் பயன்படுத்த முன்வருவோரின் எண்ணிக்கையே குறைவு. தமக்கென வாய்த்த அறிவுத்திறனையும் உழைப்பையும் பழமை வட்டத்திற்குள்ளேயே சுழலவிட்டு, அதன் தன்மையைக் காப்பாற்றுவதே பிறவிப்பயன் என்னும் புனிதக் கோட்பாட்டிற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர் பலர். அந்தப் பழமைப் பெருஞ்சுவரைத் தீண்டினாலும் பொறுத்துக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். ஏதோ தங்களைத் தனிப்பட்ட முறையில் எதிர்க்க முற்பட்டதாகக் கருதிப் போராடக் கங்கணம் கட்டிக் கொள்ளுகின்றனர்.
Be the first to rate this book.