தொடர்ச்சியான உறவுகளில், வாழ்நிலைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கங்களுக்கும் நெருடல்களுக்கும் பிறகான மன அமைதியில், வெற்றிடத்தில், மனப்பிறழ்வில், ஆகக் கடைசியிலான தேடலில் நமது கைகளுக்குள் தங்கிக்கொள்ளும் சில உணர்வுகளின் ஈரமான தடத்தைப் போலவே இக்கதைகள் நம்முள் தங்கிக்கொள்கின்றன. கைவிடப்பட்ட வழியில், சந்திப்பில் தோன்றி மறைந்துபோகும் சில முகங்களின் சிறு சிறு ஞாபகங்களும் தொடர்ச்சிகளும் முடிவுகளும் இப்படித்தான் நம்மை நிலைகுலையவைக்கின்றன. வாழ்வு எப்போதும் கச்சிதத்தன்மையற்றதுவே, அதைத்தான் இக்கதைகள் பட்டவர்த்தனமாக எடுத்துக் காண்பிக்கின்றன.
- ஜீவன் பென்னி
Be the first to rate this book.