திராவிட இயக்க எதிர்ப்பு என்பது, பெரியாரையோ, திராவிடர் கழகத்தையோ எதிர்ப்பது எனப் பொருள் கொள்ள முடியாது. பார்ப்பனிய ஆதரவே திராவிட இயக்க எதிர்ப்பாக வெளிப்பட்டுள்ளது. இதனை ம.பொ.சி. அவர்களே, 'நானறிந்த ராஜாஜி' என்னும் நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டிலே ஒரு சாரார், பிராமணர் தமிழர் அல்லர்; தமிழருக்கு அந்நியரான ஆரியரே என்று பிரச்சாரம் செய்தது. தலைவர் ராஜாஜிக்கு மிகுந்த வேதனையைத்தந்தது. பிராமணர் - பிராமணரல்லாதார் என்னும் வேற்றுமையைப் போக்குகின்ற குறிக்கோளுடன்தான். தமிழர் என்ற இன உணர்ச்சியை நான் வலியுறுத்துகின்றேன் என்பதில் ராஜாஜிக்கு ஐயமிருக்கவில்லை" (பக்.350) என்பது சிலம்புச் செல்வரின் கூற்று. ராஜாஜிக்கு மட்டுமின்றி, நமக்கும் எந்த ஐயமும் எழ இடமில்லாமல் ம.பொ.சி. தன் நிலையை விளக்குகின்றார்.
Be the first to rate this book.