உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊரடங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம், தத்துவம் எனப் பல நிறம் பூசியவை எனினும் இவற்றின் மைய நரம்பில் மறவாமல் காமத்தின் நறுமணம் கமழ்கிறது. சொல்லப்படாத புத்துலகம் அத்தனையிலும் திறக்கிறது. எல்லாக் கதைகளிலும் தவறாமல் நல்லவர்கள் நாசமாகிறார்கள். எல்லாவற்றின் இறுதியிலும் வாசகன் மனம் சற்று நேரம் அதிர்கிறது.
Be the first to rate this book.