'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இங்கு இறுகிப் பிணைந்து கிடைக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக் கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் 'கிடை'தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டியுள்ள நுட்பம் அலாதியானது.
- எம். ஏ. நுஃமான்
5 அற்புதமான புத்தகம்
https://www.youtube.com/watch?v=iQXDOF6JTPo&t=83s
K.Ragavendran 16-06-2020 11:39 am