தமிழகத்தில் கல் நாதஸ்வரம் திருநெல்வேலியிலும் கும்பகோணத்திலும் மட்டும் இருப்பதாக ஒரு செய்தி. இதில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதசுரத்தைப் பற்றி ஒரு காதல் கதையாக எழுதி இருக்கிறார் கி.ரா.கோபாலன். அவர் கதைகள் பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளாக இருக்கின்றன. மலையாள விமர்சகர் கே.எம்.ஜார்ஜ் கட்டுரை ஒன்றில் கல்கி, அகிலன் ஆகியோருக்கு அடுத்து கி.ரா.கோபாலனை வரலாற்றுப் புனைவாளராகக் கருதுகிறார்.
Be the first to rate this book.