அரசாங்கக் கொள்கை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முதல் தொழில்நுட்பம், பணியிடங்கள் மற்றும் ஊடகங்கள் வரையிலும் ஆண்களுக்காக ஆண்களால் கட்டமைக்கப்பட்ட உலகில், மக்கள்தொகையில் ஒருபாதியை, எவ்வாறு மீண்டும் மீண்டும் நாசகர விளைவுகளோடு, திட்டமிட்டுப் புறக்கணிக்கிறோம் என்பதை ’கட்புலனாகாத பெண்கள்’ வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. பெண்கள் மறக்கப்படுவதன் கட்புலனாகாத வழிகளையும், அவை நம் அனைவரின் மீதும் ஏற்படுத்துகிற ஆழமான தாக்கத்தையும் உணர்வில் பதியத்தக்க பல்வேறு விதமான நேர்வு-ஆய்வுகள், கதைகள் மற்றும் புதிய ஆய்வுகளை முதன்முறையாக ஒருங்கிணைத்து தொகுத்துள்ளார் கரோலின் க்ரையாடோ பெரெஸ்.
Be the first to rate this book.