கதை கதையாம்… நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் இந்நூலின் ஆசிரியரது சொந்தக் கதைகளா என்றால் ‘இல்லை’.
ஆனால், சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் உற்றுநோக்கலாலும் நினைவாற்றலாலும் உள்வாங்கலாலும் உருவானவை.
எப்படியெனில், சிறுவயதில் தான் கேட்ட கதைகளை ஆழ்மன நினைவிலிருந்து வெளிக்கொணர்ந்து அவற்றைத் தன் கற்பனையாற்றலால் மாற்றியமைத்துள்ளார்.
காட்சிப்படங்களாக தான் கண்டு இரசித்த, பார்த்த ஓவியக் காட்சிகளை மனதில் இருத்தி அவற்றைக் கதைகளாக்கியுள்ளார்.
‘கதைக்கான மூலமின்றி’ சொந்தமாகத் தானே உருவாக்கிக் கதைகளாக வார்த்துள்ளார்.
Be the first to rate this book.