1983 என்ற கொலைக்களத்தை நாம் எவ்வாறு வந்தடைந்தோம் என்பதைப் பற்றி நாம் ஆழமாக யோசித்ததில்லை. 1983 இன் அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அதைத் தொடர்ந்த 26 வருடகாலப் போரின் வரலாறு காட்டிநிற்கிறது. மூன்று தசாப்தகாலப் போரினதும் பேரழிவினதும் பாடங்களைக் கூட நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை போரின் முடிவுக்கு பின்னரான 15 ஆண்டுகள் காட்டிநிற்கின்றன. வரலாற்றை யாருமே வழிகாட்டியாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. வரலாற்றில் இருந்து பாடமெதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடமாகும்.
Be the first to rate this book.