கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு என்பது ஒரு இதிகாசப் போர் போல இருவரின் இறுதிக் காலம் வரை இடி முழக்கம் போல் சதா முழங்கிக் கொண்டிருந்ததை எவராலும் இன்று வரை மறக்க முடியாது!
உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை உசுப்பி விடும் சக்தியாக, அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு சித்தாந்த மோதலாக. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் இவர்கள் இருவரும் என்றென்றும் சிலிர்ப்புடனேயே வைத்திருந் தார்கள் என்றால் மிகையல்ல!
உணர்ச்சி பொங்கும் ஒரு எதிர்மறை உறவு, இவ்விருகட்சித் தொண்டர்களுக்கு இடையே அணையாது, இன்றளவும் அரசியல் களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பது உண்மை.
சொல் என்று வந்துவிட்டால் வில்லை வளைக்கும் பகை நெருப்பு? சொல்லி மாளாத அளவுக்கு கால் நூற்றாண்டுக்கு மேலாக கந்தகக்களமாக தங்களின் மூச்சையும், பேச்சையும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் போல். பகைமையையும். பழிவாங்கும் குணத்தையும் அடை காத்தவர்கள் இந்திய அரசியலில் இல்லை என்றே கூற வேண்டும்!
Be the first to rate this book.