ஆன்ம குருவின் அங்கி சஅதீயின் தோள்களில் லகுவாகப் பொருந்துகிறது. அவரில் நான் தூய இறையியலைக் காண்கிறேன். அவர் அற நியதிகளின் உலகளாவிய தன்மையையும் நிரந்தர விளைவுகளையும் வலியுறுத்துகிறார். அறம் பேணும் ஆன்மாவின் சர்வ ஆற்றலைக் கொண்டாடுகிறார்.
- ரால்ஃப் வால்டோ எமர்சன்
அவரின் கவிதைகளில் இளமை படிக்கக் கற்கிறது, முதுமை கற்கப் படிக்கிறது.
- ரெனால்டு நிக்கல்சன்
ஆதமின் மக்கள் ஒரே உடலின் அங்கங்கள் ஆவர். ஏனெனில் அவர்கள் ஒரே மூலத்திலிருந்து படைக்கப்பட்டோர். அங்கம் ஒன்றைக் காலத்தின் ஆணை காயப்படுத்தினால், ஏனைய அங்கங்கள் எதுவும் நிம்மதி அடைவதில்லை. அடுத்தவர் துன்பம் கண்டு நீ கலங்கவில்லை எனில், மனிதன் என்னும் பெயருக்கு நீ அருகதை இல்லை!
- இமாம் சஅதீ
Be the first to rate this book.