கரப்பான்' இன்றியமையாது நமக்கு காஃப்காவை நினைவுபடுத்தும். கிரேகர் சம்ஸாவும், கே யும் மனிதர்கள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய அமைப்புகளே எப்படி அவர்களை பலி வாங்குகிறது என்பதை உணர்த்தியவர் காஃப்கா. இன்றைய வாழ்வை ஆக நெருக்கமாக அறிந்தவர் காஃப்கா தான் என்று கூட எனக்கு தோன்றுவதுண்டு. அரிசங்கரின் 'கரப்பான்' நவீன வாழ்வின் பொருளின்மையை, சிடுக்குகளை, அதன் மையத்தில் இருக்கும் வெற்று துளையை பேசுகிறது. இதன் கதை மாந்தர்கள் நமக்கு நன்கு பரிச்சயமானவர்கள். ஆனாலும் இலக்கியத்தில் அவ்வளவாக சீண்டப்படாதவர்கள். அதுவே இதை முக்கியமான சமகால பிரதியாக ஆக்குகிறது.
- சுனில் கிருஷ்ணன்
Be the first to rate this book.