கரமசோவ் சகோதரர்கள் நாவல் ஓர் அற்புதமான படைப்பு. அதன் ஆற்றலும் நேர்மையும் பல வாசகர்களைக் கவர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, தஸ்தயெவ்ஸ்கி மிக முக்கியமான, பிரம்மாண்டமான படைப்பை நமக்குக் கொடுத்துள்ளார். இது நம் காலத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தஸ்தயெவ்ஸ்சியின் மேதமை மறுக்க முடியாதது.
மனித மனத்தின் ஆழமான, சிக்கலான எண்ணங்களையும், அதன் முரண்பாடுகளையும் தஸ்தயெவ்ஸ்கியால் அற்புதமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இருத்தலின் ஆழமான கேள்விகளை எதிர்கொள்ள வாசகனுக்குச் சவால் விடும் படைப்பு இது. தஸ்தயெவ்ஸ்கியின் மிகப்பெரிய பலம் மானுட துயரங்களையும் இரட்சிப்புக்கான தேடலையும் சித்தரிப்பது. மனிதர்கள் எவ்வாறு நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும். அவர்கள் நம்பிக்கையின் மூலம் எவ்வாறு மீட்பைத் தேடுகிறார்கள் என்பதையும் கரமசோவ் நாவல் சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகம் ஒரு புனைகதை மட்டுமல்ல. வாழ்க்கையின் அர்த்தத்தையும், தீமையின் இருப்பையும், துன்பத்தின் இயல்பையும் குறித்த ஆழமான தியானம்,
-கேசவமணி
Be the first to rate this book.