கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறனராகத் திகழ்கிறார் சரிதா ஜோ. தமிழ், உளத்தியல், கல்வியியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டமும் குங்ஃபூ தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டையும் பெற்றவர்.
தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை, நீலமரமும் தங்க இறக்கைகளும், பேயாவது பிசாசாவது. நிழலைத் திருடிய பூதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கனவுக்குள் ஒரு கண்ணாமூச்சி இவரது ஐந்தாவது நூல்
சரிதா ஜோவின் கதைகளில் குழந்தை களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அம்சங்கள் நிறைய உள்ளன. எளிய வாக்கியங்களால் அவர் கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. அவர் சுதைகள் கற்பனையைத் தூண்டி விடுகின்றன. தொடக்கத்தில் நாலைந்து வரிகளிலேயே குழந்தைகளைத் தம்மை நோக்கி இழுத்துக் கொள்கின்றன. கதைகளின் முடிவுகள் மிகவும் இயல்பாக இருக்கின்றன.
-பாவண்ணன், எழுத்தாளர்
Be the first to rate this book.