எந்தநாட்டிலும், நம்பொணாக் கதைகள் உண்டு, அதுபோல் இங்குமுண்டு; அதை உணராது, பூதேவர்களின் புராணாதிகளை அலசிக் காட்டுகிறாயே, அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே, யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்? அந்தக் காலம் மலையேறிவிட்டது. இப்போது, இலக்கியங்களிலே உள்ள “ரசம்” இருக்கிறதே, அதைத்தான் பருகி இன்புறுகிறோம். அதிலும், கம்பரசம் பருகப் பருக இனிக்குமப்பா. பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும், அதன் அருமை பெருமை! உணர்ச்சி, உற்சாகம், எழுச்சி யாவும் உன் உள்ளத்திலே பொங்கும். கலா ரசிகனாகவேண்டும் என்றால், கம்பரசம் பருகவேண்டும்!
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.