மனித உறவுகளுக்கிடையே கசப்பான நினைவுகள், வருத்தங்கள், கோபங்கள் எல்லாம் மறைந்து, ஏதுமற்ற நிச்சலன மனத்துடன் யாரும் வாழ்ந்துவிட்டுச் செல்வதில்லை; அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம். உளச் சிக்கல்களுக்கு ஆயிரம் காரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் விடைகள் மட்டும் கிடைப்பதேயில்லை; ஏனெனில் நமக்கு விடைகள் தேவைப்படுவதில்லை. ஆத்ம திருப்தியை மட்டுமே தேடி எந்த எல்லைக்கும் செல்கிறோம், அவ்வளவே. மனித மனம் சுரங்கம் போன்று ஆழமானது, விஸ்தாரமானது, ஆற்றல் மிகுந்தது. ஆனால் அதன் நுழைவுவாயிலைக் குறுக்கி, நம் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு விதமான மனமும் அவர்கள் கையாளும் விதத்தையும் இக்கதைகள் பேசுகின்றன. கடவுள், இறப்பு - இரண்டுமே நம்மை ஓரடி தள்ளி நின்று யோசிக்கவைக்கும், அமைதி காக்கவைக்கும்; எது உண்மை எது மாயை என்று சந்தேகிக்க வைக்கும். அந்த உணர்வை இத்தொகுப்பின் கதைகளெங்கும் நீங்கள் உணரக்கூடும்.
Be the first to rate this book.