“கொலைதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் இயல்பாக நடந்து விட்டுப் போகட்டும், அது ஏன் என் வழியா நடக்க வேண்டும். அப்படி ஒரு கொலையைச் செய்ய வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்ற வேண்டும். கொலை செய்வது பற்றி எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது பாருங்கள் அதனைத்தான் கொஞ்சம்கூட பொறுத்துகொள்ள முடியவில்லை. அப்படிக்கூட யோசிக்கக்கூடியவன் நான் என்பது மட்டும் என் மகளுக்குத் தெரிந்தால் நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”
Be the first to rate this book.