கவிஞர் பழைய மொபைலில் எழுதி மறந்துபோன கவிதையொன்று திரும்பி வந்து “என்னைப் போர விட்டிட்டாயே” என்று புலம்பி அழுததால் இத்தொகுப்பைக் கொணர்ந்திருக்கிறார். கல்கோணா மிட்டாய்க் கடவுள், இறைவி, அவதாரமேயாயினும், சிலிண்டரை ஆட்டாதே கண்ணா, முற்றடைப்பு காலக் கடவுள், கீழிறங்கி வா ஆத்தா, கடவுளோடு ஒரு ரம்மி, நந்தியின் இரகசியம், என்று கடவுளோடு உரையாடல் நடத்திக்கொண்டே இருக்கிறார் கவிஞர்.
ஆச்சரியமும், புன்சிரிப்பும் ஏற்படுத்தும் கவிதைகள் சிலவற்றில் கவிஞரின் மனைவி திடீர் திடீரென்று வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அப்பா இல்லாத வீடுகள், உப்பு, துஷ்டி கேட்கச் சென்றவன், மிட்டாயின் மரணம், இரண்டாமவள், தகவலாகவேனும், விட்டுப் போன கிழவன் ஆகிய கவிதைகளில் இழப்பின் வலி இழையோடுகிறது.
Be the first to rate this book.