சாமி இல்லை, பூதம் இல்லை. சொர்க்கம் இல்லை, நரகம் இல்லை; அவை குறித்த கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன். சூப்பர்மேன், பிள்ளையார், அல்லாஹ். இயேசு போன்ற சூப்பர் ஹீரோக்கள் குறித்த கதைகள் மட்டுமே இருக்கின்றன. அந்தக் கற்பனைக் கதைகள் மனிதர்களைப் பயமுறுத்துகின்றன; அவர்களை ஒடுக்குகின்றன; பூஜை. புனஸ்காரங்கள், நோன்புகள் என்று நேர விரயம் செய்கின்றன. வன்முறைகளுக்கு இறை அங்கீகாரம் தருகின்றன.
அவற்றுக்கு மாற்றாக, நாம் வேறு கதைகளை உருவாக்குவோம். அவை மானுடம் சார்ந்து இருக்கட்டும். மன்னிக்கவும். அனைத்து உயிரினங்கள் சார்ந்தும் இருக்கட்டும். அந்தக் கதைகள் சடங்குகளை, விதிமுறைகளை, பூஜை புனஸ்காரங்களை முன்னெடுக்காது. உரிமைகளை, சுதந்திரத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியை, கொண்டாட்டங்களை முன்னெடுக்கும். அவற்றுக்கான கற்பனைக் கதைகளைப் பகிரும்.
Be the first to rate this book.