இருட்டுமுன் தீவு போன்ற ஒரு கடல் நாணற்பரப்பைக் கடந்து சென்றன. கதிரொளியில் அது ஆடி அசைந்து பெருமூச்சு விட்டது; மஞ்சள் நிறப் போர்வை அணிந்த எதனோடோ கடல் காதல் செய்வது போல் தோன்றியது. அப்போது கிழவனது சிறிய தூண்டிலில் ஒரு கடற்பன்றி மீன் சிக்கியது. ஆகாயத்திலேறித் துள்ளிக் குதித்த போதுதான் அதைக் கிழவன் முதல் முதலாகக் கண்டான். கதிரவனின் கடைசி ஒளியில் களக மயமாய் அது காற்றடித்துப் படபடத்தது.
-நூலிலிருந்து
Be the first to rate this book.