இந்தத் தொகுப்பில், நான்கு எழுத்தாளர்களின் திரவியங்களான பத்துச் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியிருக்கிறோம். இவர்கள் நால்வரும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். து. தம்பிமுத்துவும், அழகு சுப்பிரமணியமும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது - அறுபதுகளில் இலக்கியத்தில் சாதனை செய்தவர்கள். வி.வி. கணேஷானந்தனும், வஜ்ர சந்திரசேகரவும் இரண்டாயிரங்களில் இலக்கியம் படைக்கத் தொடங்கியவர்கள். முதல் இருவரது கதைகளும் எங்கள் பெற்றோர், பேரர்களின் மறைந்து போன இலங்கையைச் சொற்சித்திரங்களாகத் தீட்டுபவை. வி.வி. கணேஷானந்தனின் கதைகள் உள்நாட்டுப் போரின் கொடூரங்களைச் சித்தரிப்பவை. வஜ்ர சந்திரசேகரவின் கதைகள் காலநிலைச் சீரழிவால் உருக்குலைந்த சமூகத்தை வர்ணிக்கும் 'காலநிலைப் புனைகதை' என்ற வகையைச் சேர்ந்தவை.
Be the first to rate this book.