படைப்புக்குள் நுழையும் எளியவர்களின் நுழைவு வாயிலாக ஹைக்கூ இருக்கிறது.
இதுவொரு நல்ல விஷயம்.
து. பொற்கொடியின் கடல் புரளும் கிளிஞ்சல்கள் தொகுப்பை வரவேற்கிறேன்.
பொற்கொடி தன் அக மனத்தை மொழிப்படுத்த நினைக்கிறார்.
அதற்கு ஹைக்கூ வடிவம் அவருக்குக் கைக்கொடுத்திருக்கிறது.
அடுத்தடுத்து கவிதையின் உத்திகளைத் தம் கவிதைக்குள் கொண்டுவந்து சிறந்த கவிதைகளை எழுதும் ஆற்றல் அவருக்கிருக்கிறது.
பொற்கொடியின் உலகம் வரையறைக்கு உட்பட்டது.
அவரது நிலத்தை எளிதாக அளந்துவிடலாம்.
அந்த எல்லைக்குள் இருந்துதான் இந்த உலகத்தைப் பார்க்கிறார்.
ஆனால், அந்த எல்லையை விரிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது.
Be the first to rate this book.