இந்தியத் தத்துவ ஞானிகளில் முக்கியமானவர் கபீர் தாஸ். இவர் தமது கவிதைகள் மூலம் இறைத் தத்துவங்களைப் பரப்பியவர்.கபீர் தாஸின் தனித்துவம், அவர் எந்த மதத்தையும் சார்ந்தவல்லர். அனைத்து மதங்களிலும் இருக்கும் மூட நம்பிக்கைகளைக் குறித்துக் கேள்விகளை எழுப்பினார் கபீர்.
இவரது கவிதைகள் ஆன்மிகக் கவிதைகள் என்ற வகைக்குள் மட்டும் அடங்கிவிடாது. இவை மனித வாழ்க்கை குறித்த பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விளக்கங்களையும் அளிக்கின்றன.
ஆசை, கோபம். அதிகாரம், தன்னலம் என மனிதர்களின் குணங்கள் குறித்தும், துறவறம், குடும்பம், பக்தி, பாசம் என அவர்களின் தேடல் குறித்தும் பல கவிதைகளை கபீர் படைத்துள்ளார்.
Be the first to rate this book.