இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களைப் பொறுத்தவரை குடும்ப அமைப்பும் சரி, வாரிசுகள் உருவாக்கமும் சரி.. அவை தொடர்ச்சியைப் பேணும் காரணிகளே. இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு நல்ல படைப்பு என்பது வாசகப் பரப்பில் காலம் கடந்தும் இயங்கிக்கொண்டே இருக்கும். பல நூற்றாண்டுகளைக் கண்டும் கடந்தும் விட்ட சங்க இலக்கியப் படைப்புகள் இன்றைக்கும் தொய்வின்றி இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இலக்கியங்கள் குறித்தான தொடர் தேடல்களும் உரையாடல்களும் இன்றளவும் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன; இனியும் தொடரும்.
சமகாலத்தில் பரவலான வாசகப் பரப்பை ஈர்க்கும் வகைமையிலான மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர் மீரான் மைதீன், நாஞ்சில் நாட்டு மொழி நடையில் அவர் உருவாக்கும் கதைகள் சட்டென்று வாசக மனத்தில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. எட்டுப் பகுதிகளாக வெளிவரவுள்ள காவியலோகம் நாவலின் முதல் பாகம் இது. இம்முறை அவர் கையிலெடுத்திருக்கும் இந்த உத்தியானது இலக்கிய வாசகர்களைத் தொடர்ந்து அவரை நோக்கிய தேடலில் நிறுத்திவைக்கும். இந்தக் காவியலோகம் நிலைத்திருக்கும்.
Be the first to rate this book.