குழந்தைகளின் கதைகளில் அறநெறி மட்டும் தான் பேச வேண்டும் என்ற காலம் போய்விட்டது. அரசியல் சாதி சமூகம் வரலாறு என்று பலதையும் பேச முடியும் என்று சமகாலத்தில் பல எழுத்தாளர்கள் செய்தும் காட்டியுள்ளார்கள்.
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.