கவிதை மனதின் பிழிவு, மனிதனைச் சொற்களால் படைக்கும் முயற்சி, வாழ்வின் தப்பியத் தருணங்கள் கவிதைகளாகின்றன. கவிதை காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் உயிர் இயக்கம் போலவே கவிதையும் காலத்தை எழுதிச் செல்கிறது. நவீன வாழ்வில் தனித்துவிடப்பட்ட அகத்தின் பிழிவுகளாகவும், அன்பின் ஏக்கங்களாகவும் பல கவிதைகள் உள்ளன. எளிமையும், இனிமையும், நுட்பமும், கச்சிதமும் கவிதைத் தெறிப்புகளாகப் பதிவாகி உள்ளன. நவீன வாழ்வை, நவீன மொழியில், பாசாங்கற்ற மொழிதலில் எடுத்துரைக்கும் கவிஞர் மீனாட்சி ஜவஹர் எதிர்கால தமிழ்க் கவிதையின் நம்பிக்கையாக மிளிர்கிறார்.
-முனைவர் இரா.காமராக
Be the first to rate this book.