அயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல்.
அவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன. சில மனதில் பூத்தூவுகின்றன. சில மண்ணைவாரி தூற்றுகின்றன. அடிமைச்சங்கிலியை தகத்தெறியச்செய்யும் சில கவிதைகள். பீறிட்டெழும் கொப்பளிப்புகள் நம்நெஞ்சை உடைக்காமலில்லை.
வரலாற்று சிறப்பு மிக்க கவிதைகளை இங்கே காணலாம்.
இருப்பினும் கவிகளின் வாழ்க்கைப் பின்னணியில் நின்று பார்த்தோமானால் அவர்கள் எழுத்திற்குள் இன்னொரு முகம் விரக்தியில் சீறிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான கவிதைகள் வாழ்க்கை மீதுள்ள பற்றின் காரணமாக அல்லாமல் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள தாக்கத்தைக்கொண்டே கிளர்ந்தெழுகின்றன.
Be the first to rate this book.