யூத தேசியத்தைக் குறித்து மகாத்மா காந்தியின் மனநிலையையும் கண்ணோட்டத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது. யூதர்கள், யூத தேசியம் சார்ந்த அவரது கண்ணோட்டம், யூத வரலாற்றைப் பற்றி அவர் கொண்டிருந்த குறைந்த அளவு புரிதலின் வெளிப்பாடாகும் என்ற கருத்தைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைக்கிறது.
சிறுபான்மையினர் மீது காட்டப்படும் பச்சாதாபத்தின் அடிப்படையிலான யூதத் தேசியம் குறித்த காந்தியின் பார்வை மற்றும் இதன் பின்னால் இருக்கும் அரசியல்ரீதியான, மதரீதியான, தர்க்கரீதியான வேறுபாடுகள் போன்றவற்றைத் தீவிரமாக ஆய்வு செய்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் பி.ஆர்.குமாரசுவாமி.
பென்னேசனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் ‘இஸ்ரேல் - பாலஸ்தீன’ பிரச்சினை குறித்து காந்தி கொண்டிருந்த நிலைப்பாட்டை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் வாசகர்கள் அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.காந்தியின் அரசியல் நிலைப்பாடு குறித்த பல்வேறு விவாதங்களை இந்தப் புத்தகம் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.Squaring the Circle என்னும் நூலின் அதிகாரபூர்வ மொழியாக்கம் இது.
Be the first to rate this book.