நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்களும் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலின் பஞ்மர் வரிசை நாவல்களில் இதுவும் ஒன்று.
ஈழத்தின் சாதி எதிர்ப்பு இடதுசாரியாகவும் போர்க்குணமிக்க தலித் இலக்கியப் பிதாமகராகவும் போற்றப்படுகின்ற கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரது நாவல்களை, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டின் விளைச்சலில் உருவான கருப்புப் பிரதிகளின் வெளியீடுகளாக மீளச்சு செய்து தமிழக ஈழ - புகலிட மக்கள் முன் வைப்பதில் பேருவகை கொள்கிறோம்.
Be the first to rate this book.