தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் சந்திக்கும் பெண்களும் நம்மை ரசிக்கவும் யோசிக்கவும் வைப்பார்கள். காமரூபவல்லி புத்தகத்திலிருந்து வெளியே வந்துவிட மாட்டாளா என்று யாசிக்கவும் வைப்பாள்.
- ஜிரா
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன். வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க் கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண். இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு', சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', புதினமாக 'காமரூபவல்லி' பதிப்பித்த பிறகு கொண்டு வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'சுவீட் காரம் காப்பி'.
Be the first to rate this book.